அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

நியூசிலாந்துக்கு எதிரான 4-வது போட்டி: 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி



பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் போட்டித் தொடரை நியூசிலாந்து 2- 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.   3 டெஸ்ட் கொண்ட தொடர் 1- 1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.  



  6 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்திலும், 3- வது போட்டியில் பாகிஸ்தான் 43 ரன்னிலும் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.   பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதிய 4-வது ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடந்தது.


“டாஸ்” வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.   நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன் எடுத்தது. பிராங்ளின் 75 பந்தில் 7 பவுண்டரியுடன் 62 ரன்னும், நாதன் மேக்குல்லம் 58 பந்தில் 53 ரன்னும் (5 பவுண்டரி 1சிக்சர்) எடுத்தனர்.    

பாகிஸ்தான் தரப்பில் வகாப் ரியாஸ் 3 விக்கெட்டும், அப்ரிடி, முகமது ஹபீஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.  

263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் நிதானமாக ரன்களை சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர்களான முகமது ஹபீஸ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அகமது ஷேஷத் 42 ரன்கள் சேர்த்தார்.   பின்னர் களமிறங்கிய யூனுஸ்கான் 42 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

யூனுஸ்கானுக்கு பிறகு ஆடியவர்கள் ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழந்தாலும், அதிகபட்சமாக மிஸ்பா-உல்-ஹக் ஆட்டமிழக்காமல் 93 ரன் எடுத்தார்.   இதனால் 49 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 264 ரன் எடுத்து பாகிஸ்தான் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

நியூசிலாந்து தரப்பில் ஸ்டைரிஸ் 3 விக்கெட்டுகளையும், பெநெட், வெட்டோரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.  

93 ரன் எடுத்த மிஸ்பா-உல்-ஹக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.  

இதனால் 6 போட்டிகளை கொண்ட தொடரில் 2- 1 என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!