அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

ஐபிஎல் வேண்டாம்: இங்கிலாந்து வீரர்களுக்கு ஆன்டி ஃபிளவர் அறிவுரை

ஐபிஎல் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து வீரர்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டாமென்று அந்த அணியின் பயிற்சியாளர் ஆன்டி ஃபிளவர் கூறியுள்ளார்.


தொடர் தோல்வியால் துவண்டிருந்த இங்கிலாந்து அணியை வலுவாக்கி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரை வரலாற்றுச் சாதனை படைத்து வெல்லச் செய்தவர் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆன்டி ஃபிளவர்.


லண்டனில் இருந்து வெளியாகும் டெய்லி மெயில் பத்திரிகையில் ஞாயிற்றுக்கிழமை இது குறித்து அவர் கூறியிருப்பது:

ஐபிஎல் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து வீரர்களை நான் குற்றம் கூறவில்லை. ஆனால் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதைக் காட்டிலும், ஐபிஎல் போட்டியில் விளையாட அதிகம் ஆர்வம் காட்ட வேண்டாம் என்றுதான் கூறுகிறேன்.

நாட்டுக்காக விளையாடுவதற்காக வீரர்கள் எப்போதும் தங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கிலாந்து அணி அடுத்த சில மாதங்களில் அதிக போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. எனவே ஐபிஎல் போட்டிகளின் போது வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால், அது தேசிய அணியின் வெற்றியை பாதித்துவிடும். எனவே வீரர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!