வினோத் காம்ப்ளி, ஜெயசூர்யா உள்ளிட்ட பிரபல வீரர்கள் பங்கேற்கும் சூப்பர் சிக்சஸ் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது.
இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் இலங்கையின் ஜெயசூர்யா, இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்னைட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இப்போட்டிகளை நடத்துகிறது. இதில் 48 கார்பரேட் நிறுவனங்களின் அணிகள் பங்கேற்கின்றன.
ஜனவரி 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் ஓர் அணியில் 6 வீரர்களே இடம்பெறுவர். ஒவ்வொரு இன்னிங்ஸýக்கும் தலா 6 ஓவர்களே பந்து வீசப்படும். போட்டிகள் நாக்-அவுட் முறையில் இருக்கும். இறுதிச் சுற்றுப் போட்டிகள் ஜனவரி 25-ம் தேதி மாயாஜால் விளையாட்டு அரங்கிலும், மற்ற நாக்-அவுட் ஆட்டங்கள் மாநிலக் கல்லூரி மைதானத்திலும் நடைபெறும்.
48 அணிகளில் 8 அணிகள் காலிறுதிக்கு தேர்வு செய்யப்படும். இந்த 8 அணிகளில் காம்ப்ளி, ஜெயசூர்யா, அரவிந்த் டி சில்வா, நயன் மோங்கியா, சஞ்சய் பாங்கர், ராபின் சிங், லான்ஸ் குளூஸ்னர் ஆகிய 8 பேரில் தலா ஒருவர் இடம் பெறுவர்.
சூப்பர் சிக்சஸ் முறையில் சென்னையில் நிறுவனங்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் உள்ளூர் வீரர்களுக்கும் சர்வதேச வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.
சென்னையில் சூப்பர் சிக்சஸ் கிரிக்கெட்: காம்ப்ளி, ஜெயசூர்யா பங்கேற்பு
Subscribe to:
Post Comments (Atom)
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!