அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

ஐசிசி டெஸ்ட் போட்டி முன்னணி 4 அணிகள் மட்டுமே வாய்ப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டிகள் நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்சில் 2017ம் ஆண்டு நடக்கிறது. 2வது போட்டி 2020ம் ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ளது. இந்த போட்டி தொடரில் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் 8 அணிகளும் பங்கேற்க முடியாது. ஐசிசி தரவரிசையில் முதல் 4 இடங்களில் உள்ள நாடுகளே இதில் பங்கேற்க முடியும் என்று தெரிகிறது. ஐசிசி நிர்வாகிகள் இதுகுறித்து இறுதி முடிவை எடுப்பார்கள். 



செப்டம்பரில் நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட உள்ளது. மேலும் 5 நாட்களுக்குள் போட்டி முடிவு எட்டப்படாவிட்டால் 6வது நாளும் போட்டியை தொடர வேண்டும் என்று ஐசிசி ஆலோசகர் பிந்த்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் முதல் இன்னிங்சில் முன்னிலை பெறும் அணி வெற்றி பெற்றதாக அறிவித்தால் அது போட்டியின் விறுவிறுப்பை கொன்றுவிடும் என்று அவர் தெரிவித்தார்.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!