வதோதராவில் நடைபெற்ற 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கம்பீரின் அதிரடி சதத்தால் இந்தியா அணி நியூஸீலாந்து அணியை 9 விக்கெட் வித்திசாயத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
பூவா தலையா வென்ற இந்திய அணி முதலில் நியூஸிலாந்து அணியை பேட்டிங் செய்த பணித்தது.
தொடக்க வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து அந்த அணிக்கு விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. ப்ராங்கிளின் அதிகபட்சமாக 72 ரன் எடுத்தார். என்.எல்.மெக்குல்லம் 43 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர்.
இந்திய தரப்பில் ஜாகீர்கான், அஸ்வின், பத்தான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முன்னா படேல் 1 விக்கெட் கைப்பற்றினார்.
225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 39.3 ஓவரில் 229 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடி தொடரை 3-0 என்று கைப்பற்றியது.
தொடக்க வீரரும் அணித்தலைவருமான கம்பீர் அதிரடியாக விளையாடி 117 பந்தில் 126 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவர் 16 பவுண்டரிகளை விளாசினார். மற்றொரு தொடக்க வீரர் விஜய் 30 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த கோலி அபாரமாக விளையாடி 63 ரன் குவித்தார். இவர் 2 சிக்சர், 6 பவுண்டரிகளை விளாசினார்.
ஆட்ட நாயகனாக கம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!