"அதிரை AFCC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி 2014"
ஆம் வருகின்ற எப்ரல் 19 அன்று ஷிபா மருத்துவமனை எதிர்புறம் அமைந்திருக்கும் கிரானி மைதானத்தில் மாவட்ட அளவிலான Cricket தொடர் போட்டி இவ்வாண்டும் நடைபெறவுள்ளது. தஞ்சை மாவட்டத்தின் தலை சிறந்த அணிகளுள் ஒன்றான Adirai Afcc இப்போட்டியை நடத்த உள்ளது. சென்ற ஆண்டு நடைபெற்ற போட்டியில் Adirai Afcc முதல் பரிசை தட்டி சென்றதுடன் அதிரைக்கு பெருமை தேடித்தரும் வண்ணமாக தஞ்சை அணிக்காக மாவட்ட அளவில் விளையாடும் வாய்ப்புகளையும் அவ்வணியின் வீரர்கள் பெற்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.. தஞ்சை மாவட்டத்தில் அதிரைகென தனி இடத்தை தக்கவைத்திருக்கும் Adirai Afcc இவ்வாண்டும் மாவட்ட அளவில் வெற்றிபெறும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு...
இவ்வாண்டின் பரிசுத்தொகை விவரம் பின்வருமாறு.
முதல் பரிசாக ₹30,000
இரண்டாம் பரிசாக ₹20,000
மூன்றாம் பரிசாக ₹15,000
நான்காம் பரிசாக ₹10,000
(மற்றும் சிறப்பு பரிசுகள்)
இதில் பங்குபெற விரும்பும் அணிகள் முன்னதாகவே பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்www.adiraiafcc.blogsopt.in
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!