உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகப் போவதாக முத்தையா முரளிதரன் அறிவித்துள்ளார்.

எனது நேரம் முடிந்து விட்டது. ஐபிஎல் போட்டிகளுக்காக 2 ஆண்டுகள் ஒப்பந்தமாகியுள்ளேன். அதேபோல நியூசிலாந்து, இங்கிலாந்திலும் விளையாடவுள்ளேன் என்றார் முரளிதரன்.
38 வயதாகும் முரளிதரன் கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் உலகக் கோப்பைப் போட்டிகளுடன் ஒரு நாள் போட்டி உள்ளிட்டவற்றிலிருந்தும் விடைபெறுகிறார்.
இன்னும் சிறிது காலம் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் அவர் விளையாடுவார் என்று தெரிகிறது. கொச்சி ஐபிஎல் அணி முரளிதரனை ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த 3 ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முரளிதரன் ஆடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர் என்ற சாதனை முரளிதரன் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!